காசோலை வழங்கி பணம் பெற்றுக்கொள்பவர் பணம் தர மறுத்தால்.....
.
கீழ்கண்ட காசேலையை வழங்கியவர் திரு. செந்தில்குமாருக்கு பணம் வழங்க மறுத்தால், காசோலை தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் (முன்னர் காசோசலையின் மதிப்பின் காலம் 6 மாதங்களாக இருந்தது) அதை செந்தில்குமார் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.
.
காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமே வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கிய ராமசாமிக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பு வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.
.
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை வழங்கிய ராமசாமி அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் செந்தில்குமாருக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.
.
காசேலை வழங்கியவரான ராமசாமிக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை ராமசாமி மீது செந்தில்குமார் தாக்கல் செய்யலாம்.
.
இந்த கால அளவில் ஏதாகிலும் தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.
.
படத்தில் கண்ட காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க செந்தில்குமார் தாக்கல் செய்கின்றார். காசோலை வழங்கிய ராமசாமி கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் செந்தில்குமாருக்கு தெரியப்படுத்துகின்றார். காசோலை வழங்கிய ராமசாமியை தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார். அவர் பேச்சை கேட்டு காசேலை பெற்றவரான செந்தில்குமார் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பவில்லை. ஒரு மாதம் கழிகின்றது. பணம் கேட்டால், கசோலை கொடுத்த ராமசாமி திரும்பவும் பணம் கொடுக்க மறுக்கின்றார். இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது ஏனெனில் 30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால். .
பிறகு என்ன செய்யலாம்?
.
காசோலை தாக்கல் செய்வதற்கான கால அளவு 15.08.2016 வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை காசோலையை செந்தில்குமார் அவரது வங்கியில் தாக்கல் செய்து, அது திரும்பி வந்தால், இப்போது சட்ட அறிவிப்பு வழங்கவேண்டும். சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்தற்கான காரணத்தையும் (ராமசாமி பணம் தருவதாக கூறியதையும்) தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.
.
பணத்தை வசூலிக்க 15.08.2016க்கு முன்னர் எத்தனை முறையும் வங்கியில் காசோலையை தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம். கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்கமால் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது. அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவருக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
.
கீழ்கண்ட காசேலையை வழங்கியவர் திரு. செந்தில்குமாருக்கு பணம் வழங்க மறுத்தால், காசோலை தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் (முன்னர் காசோசலையின் மதிப்பின் காலம் 6 மாதங்களாக இருந்தது) அதை செந்தில்குமார் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.
.
காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமே வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கிய ராமசாமிக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பு வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.
.
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை வழங்கிய ராமசாமி அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் செந்தில்குமாருக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.
.
காசேலை வழங்கியவரான ராமசாமிக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை ராமசாமி மீது செந்தில்குமார் தாக்கல் செய்யலாம்.
.
இந்த கால அளவில் ஏதாகிலும் தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.
.
படத்தில் கண்ட காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க செந்தில்குமார் தாக்கல் செய்கின்றார். காசோலை வழங்கிய ராமசாமி கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் செந்தில்குமாருக்கு தெரியப்படுத்துகின்றார். காசோலை வழங்கிய ராமசாமியை தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார். அவர் பேச்சை கேட்டு காசேலை பெற்றவரான செந்தில்குமார் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பவில்லை. ஒரு மாதம் கழிகின்றது. பணம் கேட்டால், கசோலை கொடுத்த ராமசாமி திரும்பவும் பணம் கொடுக்க மறுக்கின்றார். இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது ஏனெனில் 30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால். .
பிறகு என்ன செய்யலாம்?
.
காசோலை தாக்கல் செய்வதற்கான கால அளவு 15.08.2016 வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை காசோலையை செந்தில்குமார் அவரது வங்கியில் தாக்கல் செய்து, அது திரும்பி வந்தால், இப்போது சட்ட அறிவிப்பு வழங்கவேண்டும். சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்தற்கான காரணத்தையும் (ராமசாமி பணம் தருவதாக கூறியதையும்) தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.
.
பணத்தை வசூலிக்க 15.08.2016க்கு முன்னர் எத்தனை முறையும் வங்கியில் காசோலையை தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம். கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்கமால் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது. அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவருக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
No comments:
Post a Comment